அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் கட்சியின் சட்ட விதிகளின்படி டிசம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெறும்.

இந்தக் கூட்டங்களை கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையேற்கிறார். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்படும்.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழை கொண்டு நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *