கோடநாடு வழக்கில் எடப்பாடி A1; அப்படியெனில், தி.மு.க-வின் ‘B டீம்’ யார்?

“தொண்டர்களின் உணர்வுகளை எடுத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமியிடம் இருமுறை கூறினேன். 2026 தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால், ‘ஒருங்கிணைப்பு குறித்து ஏன் பேசவில்லை?’ என்ற கேள்வி எழும் என்று சொன்னேன். மாதம் ஒரு முறை ஆலோசனை நடத்தலாம் என்றும் பரிந்துரைத்தேன். ஆனால், அது ‘10 நாட்கள் கெடு’ என செய்திகளில் வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில், 10 தொகுதிகளில் மூன்றாவது இடம், 2 தொகுதிகளில் நான்காவது இடம் மட்டுமே பெற்றோம். ஜெயலலிதா சொன்னது போல, இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் கருத்து தெரிவித்தேன். ஆனால், அதற்காகவே எனது கட்சி பதவி நீக்கப்பட்டது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *